விநாயகர் துதி
பாடல்: பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான்
தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!
பொருள்: பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேக வைத்த கடலை பருப்பையும் கலந்து ஒரு சுவையான கலவையாக உனக்கு நான் நைவேத்தியமாக அர்ப்பணிக்கிறேன். கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூமணியே (தூய்மை ஆன மணி போன்ற பொக்கிஷமே) நீ எனக்கு இயல் (உரைநடை), இசை (பாடல் நடை), நாடகம் (உணர்ச்சி நடை) என முப்பரிமாணத்தில் மிளரும் தமிழ் பொழியை அருள்வாயாக.
நோக்கம்: பதிவாளர் பிரதான இலக்கியத்தை விவாதிக்கும் முன், முயற்சி வெற்றி பெற விக்னங்களை தீர்க்க வினை தீர்க்கும் விநாயகரை வணங்குதல் ஆகும்.
விளக்கம்: பால், தேன், பாகு, பருப்பு இவை எல்லாம் கலந்த ஒரு விநாயகர் படையல் என்ன? வெறும் கலவையான ஒரு பச்சை படையலையா இந்த பாடலின் ஆசிரியர் விநாயகருக்கு படைப்பார்? உண்மையில் இது விநாயகர் ஆசிரியர் முன்னே தெய்வ வடிவமாக தோன்றி இருக்கும் பொது வாய் வழியாக எந்த வித பிரயத்தனமும் இல்லாமல் வந்த பாடல் ஆகும். இவ்வளவு பெருமை மிகுந்த பாடலில் வரும் சொற்களும் நிறைய உள்ளர்த்தங்கள் கொண்டதாகவே இருக்கும். இல்லையா? இந்த நான்கு உணவு பொருட்களும் விநாயகருக்கு உகந்த நைவேத்தியமான மோதகம்/கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள். பார்த்தீர்களா பாடலின் ஆசிரியர் விநாயகர் துதியில் ஒரு சமையல் குறிப்பையும் சேர்த்து அருளி உள்ளார்! அந்த மோதகத்தை உனக்கு அர்ப்பணிக்கிறேன் இறைவா நீ எனக்கு முத்தமிழையும் அருளி செய்வாயாக என்று வேண்டுகிறார். அது என்ன முத்தமிழ், ஏன் கணிதமோ, இயற்பியலோ, வேற்பியலோ, கணினியோ தேவை இல்லையா? கணிதமோ, இயற்பியலோ, வேற்பியலோ, கண்ணினியோ இவை எல்லாவற்றிற்கும் மூலமே மொழி தானே, மொழி இல்லாமல் இதை படிக்கவும் முடியாது, உரைக்கவும் முடியாது, என் இவை எதிலும் புதிதாக கண்டுபிடித்தலும் நடத்த முடியாது. மொழியின் வல்லமை இல்லாமல் ஒரு கற்றல் நடைபெற முடியாது. எப்படி கணினியில் C , C ++ தான் பல முன்னணி சாப்ட்வேர்களுக்கு அடிப்படையோ, எப்படி C , C ++ ல் தான் ஜாவா, SAP , oracale மற்றும் பல எழுதப்படுள்ளதோ அதுபோலே. மொழியின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் நூதன பாடல் இது. மொழி வேண்டும் மக்களே!!!! மானத்தில் கொள்ளுங்கள். தமிழை பேணுங்கள் கொண்டாடுங்கள். மற்ற மொழிகள் போல் அல்லாமல் முருக பெருமானால் அகத்தியருக்கு உபதேசிக்க பட்ட பொதிகையில் தோன்றிய செம்மொழி அல்லவா? எது ஒரே மூலத்தில் இருந்து 50 , 60 ஆயிரம் ஆண்டுகள் முன்பு பல பல காட்டு வாசிகளின் வட்டார பேச்சு வழக்காக மட்டுமே இருந்ததை முருக பெருமான் தனது தெய்வ சக்தியால் ஒழுங்குபடுத்தி இலக்கிய, இலக்கண விதிமுறைகள் இட்டு, எழுத்துருவமளித்து அகத்தியருக்கு அருளி செய்தவரானார்! இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் சில குழுவினர் நாங்கள் எங்கள் போக்கில் தான் பேசுவோம் என்று திரிந்ததினால் அந்த அந்த குழுவினரின் பேச்சு வழக்கு பலவாறாக சேர்ந்தும், திரிந்தும் தமிழை மருவிய மொழிகளாக மாறின. அவை மலையாளம், தெலுங்கு, கன்னடம், மற்றும் பலவாகும். ஆகவே விநாயகரை வணங்குங்கள், தமிழை கொண்டாடுங்கள், செழுமை பெறுங்கள்!
வீட்டுபாடம்: படிக்க இருப்பதோ வைணவ இலக்கியம், நூலின் ஆசிரியரே வைணவர், விநாயக துதி பாடல் எதுவும் அவர் எழுதவில்லை, நீ மட்டும் எதற்கு விநாயக துதி போடுகிறாய்? வைணவமும் சைவமும் பின்னி பிணைந்த மரபுகள். மாமனின் அவதார காதையை விவாதிப்பது மருமகனின் அருள் இல்லாமலா? நூலின் ஆசிரியர் கம்பர் அன்னை காளியின் அருள் பெற்ற வைணவ மரபினரின் தத்துபிள்ளை என்பது தெரியுமா? அது போக போக! சரி வீட்டு பாடம், விநாயகர் துதியை இயற்றிய தமிழ் புலவர் யார்? அவர் குழந்தைகளின் மனம் கவர்ந்த புலவர். கருத்துகளில் சொல்லுங்கள்! மீண்டும் சந்திப்போம்!
No comments:
Post a Comment