பாடல்:
தேவ பாடையின்
இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும்
முந்திய
நாவினான்
உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது
உணர்த்திய பண்பு அரோ.
நோக்கம்:
தனது காப்பியம்
எந்த நூலின் மூலம் என்பதை கம்பர் விளக்குதல்.
பொருள்:
தேவ பாடையின்
இக்கதை செய்தவர் (தேவ பாஷையான சமக்கிருதத்தில் இதே காதையை இயற்றியவர்கள்)
மூவர் ஆனவர்
தம்முளும் முந்திய (மூன்று பேர்கள் ஆகும். அவர்களுள் முதன்மையான)
நாவினான்
உரையின்படி நான் தமிழ்ப் (நாவன்மை பொருந்திய புலவரின் நூல் உரைப்படி தான் நான் தமிழில்
பாக்களாக)
பாவினால் இது உணர்த்திய
பண்பு அரோ (இயற்றி இராமக்காதையை இவ்விதம் சொல்லியுள்ளேன்)
விளக்கம்:
கம்பர் தனது படைப்பு முற்றிலும் சொந்த
படைப்பு இல்லை (original இல்லை) என்பதை அவையோரிடம் மிக நேர்மையாக ஒப்புக்
கொள்கிறார் (open ஆக ஒப்புக் கொள்கிறார்). இங்கே நம்மில்
பலர் இந்த சூழ்நிலையில் இருந்தால் வடமொழியில் இதே கதையை வைத்து ஒரு நூல்
வந்துள்ளதை முற்றிலுமாக மறைத்தே இருந்திருப்போம். தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்சு
இருக்கட்டும், தெரியாதவங்களுக்கு இது ஒரு சொந்த படைப்பு (original படைப்பு) அப்படின்னே நெனைப்பு வரட்டும் என்று தான் நாம இருந்திருப்போம். ஆனால் கம்பர்
அப்படியில்லை நேர்மையாக இருக்கிறார். ஆனால், நம்மையும்
குற்றம் சொல்லி பயனில்லை, நாம் வாழும் காலம் அப்படி, வாயிருந்தால் தான் பிழைக்க முடியும் என்பது போல் ஆகி விட்டது. எல்லோருமே
கம்பர் போல் தெய்வீக அருள் பெற்றவராகவா இருக்கின்றோம். தெய்வ அருள் என்ற இரும்புக்
கை இருந்தால் வாழ்க்கை சுலபமாக (smooth ஆக போகும்) போகும்
இல்லையென்றால் மேடும் பள்ளமுமாக தான் போகும். (அட நீங்க வேற மேடும் பள்ளமும்னா கூட
பரவா இல்லையே பள்ளமும், மேலும் பள்ளமும் அப்படின்னு இல்லே
போயிட்டு இருக்கு. அப்படின்னு புலம்புறீங்களா? அதுவும்
வாஸ்தவம் தான்!) அதனால் தெளிவான நேர் கொண்ட அணுகுமுறை நாம் செய்யும் செயல்கள்
எல்லாவற்றிலும் இருந்தால் நமது குறை நிறைகளை நாமே ஒப்பிட்டுக் கொள்ளும்
மனப்பக்குவம் நமக்கு வந்து சேரும். அதை நாம் கம்பரிடம் பார்க்க முடிகிறது.
கம்பரிடம் நாம் கற்க வேண்டிய இன்னொரு பாடம் இது. ஒரு செயலை எடுத்துக் கொண்டோமேயானால்
அதை பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அதில் உள்ள குறை நிறைகளை
வெளிப்படையாக விவாதிக்கும் அளவிற்கு நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
கம்பர்
தனக்கு முன் இதே கதையைக் கொண்டு வந்த நூல்கள் மூன்று என்றுக் கூறுகிறார். அந்த
மூன்று நூல்களுமே தேவ பாஷை என்ற பெருமைக்குரிய சமக்கிருதத்தில் வந்துள்ளது. “பாடை”
என்னும் பதம் பாஷை என்னும் பதத்தைக் குறிக்கின்றது. தமிழில் வடமொழி அச்சரங்கள்
என்று ஷ, ஜ, ஃப ஆகிய சொற்களை கூறுவர். இந்த எழுத்துக்கள் எல்லாம் மொழியினை
வகுத்தவர்கள் வைத்துள்ள தமிழ் எழுத்துகள் பட்டியலில் சேராது. பின் வந்த தமிழ் அறிஞர்கள்
(!!!???) இந்த எழுத்துக்களை இடை சொருகி வைத்தனர். அதனால்
தமிழ் பற்றாளர்களும், முற்கால தமிழ் படைப்புகளும் இந்த வகை
எழுத்துக்களை பெரும்பாலான இடங்களில் உபயோகிக்கவில்லை. அதனால் பாஷை பாடை ஆனது, கிருஷ்ணன் கிருட்டினான் ஆனான். சரி அதை விடுங்கள், சமாக்கிருதத்தில் நூல் இயற்றிய அந்த மூவர் யார் யார்? ஒருவர் எல்லோரும் அறிந்த வால்மீகி. மற்ற இருவரும் வசிட்டரும், போதாயானரும் ஆவார்கள். இவர்கள் மூன்று பெரும் இராமாயணத்தை தனக்கு முன்பே
இயற்றினாலும் கம்பர் தனது இராமாயணத்தை வால்மீகியின் நூலை மேற்கோளாக எடுத்தே
இயற்றியதாக சொல்லுகிறார். அதுவும் வால்மீகி எப்படிப்பட்ட முனிவராம், புலமைக்கு தேவையானவற்றை எல்லாம் கற்றறிந்து, அப்படி
கற்றறிந்த புலவர்களில் முதன்மையான
புலவராகத் திகழும் பெருமைக்கு உரியவராம். அவரின் நூலினால் பெரிதும்
கவரப்பட்டு தான் நான் இந்த இராமக்காதையை இயற்ற விழைகிறேன் என்றவாராக கம்பர் இந்த
பாடலை பாடியுள்ளார்!
No comments:
Post a Comment