இங்கே நான் சொல்லும் கருத்துகள் இணையத்தில் தேடி படித்ததும்,சிறு வயது முதல் பெரியோர்களிடம் கேட்டதுமான தகவல்களே.ஆனால் நான் எங்கு எப்போது யாரிடமிருந்து அவைகளை படித்தேன் என சொல்ல முடியாது.அப்படி ஒரு பட்டியலை வைக்கவில்லை.இவைகளை ஏற்கனவே எங்கேயாவது படித்திருந்தால் இது அதன் மூலமாகவோ,இல்லை இதுவும் அதுவும் ஒரே மூலத்தில் இருந்தோ,அல்லது இவை எல்லாம் பரவலாக உள்ள புகழ்ப் பெற்ற சம்பவங்களாகவோ இருக்க வாய்ப்புள்ளது.அதனால் காப்பியடிக்கிறேன்(plagiarism)என்று பழிப்பதற்கு முன்பே நேர்மையான வாக்குமூலத்தை தந்துவிட்டேன்!