Tuesday 27 May 2014

பால காண்டம், ஆற்றுப் படலம் - பாடல்: 13


                                                முன்பே கூறியதைப் போல இராமக்காதை ஆறு பெரும் பிரிவுகளான காண்டங்களாகவும், அதன் உட்பிரிவு பல்வேறு படலங்களாகவும் வழங்கப்பட்டுள்ளது. இராமக்காதையின் அறுப்பெரும் காண்டங்கள் இவையே 1. பால காண்டம், 2. அயோத்திய காண்டம், 3. ஆரண்ய காண்டம், 4. கிஷ்கிந்தா காண்டம், 5. சுந்தர காண்டம், 6. யுத்த காண்டம். இதில் ஒவ்வொரு காண்டங்களுமே பல நூறு செய்யுள்களைக் கொண்டுள்ளதாலும், எல்லா செய்யுள்களும் ஒரே கருத்தையோ, ஒரே கதை நிகழ்வையோ சொல்லாததால் குழு குழுவாக செய்யுள்களை குவித்து அவை எந்தக் கருத்தையோ, கதை நிகழ்வையோ உரைக்கின்றதோ அதையே அந்த பிரிவின் பெயராக வைத்துவிட்டார் கம்பர். முதலில் நாம் காண இருக்கின்றது பால காண்டத்தின் ஆற்றுப் படலம் ஆகும். இதில் நான்கு செய்யுள்கள் உள்ளது. இனி நாம் கம்பரின் எண்ண ஓட்டத்தின் படியே நம் பதிவுகளில் பெரும் பிரிவாக காண்டங்களையும், சிறு பிரிவுகளாக படலங்களையும் கருத்தில் வைப்போம்.




பாடல் 13:






ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.




நோக்கம்:

சராயு நதியின் பெருமைகளையும், மகத்துவங்களையும் எடுத்துரைத்தல். குறிப்பாக, சராயு நதி எத்தகைய நாட்டினை சார்ந்தது என்பதை இப்பாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



பொருள்:

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
                    - குற்றத்தை மிகுந்து செய்வதும், அம்பினைப் போன்றதுமான ஆடவர்களின் ஐம்பொறிகள்

 காசு அலம்பு முலையவர் கண் எனும்
                            - மணிகளும், காசு வகை மாலைகளும் தரித்ததால் அவை ஒன்றோடு ஒன்று முட்டி மோதி கலகலவென்று ஓசைகளை ஏற்படுத்துகின்றன. அப்படிபட்ட அணிகலன்களை அணிந்த மார்புகளை உடைய பெண்கள்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக் 
                                 - அத்தகைய பெண்களின் கண்களும் போரில் செலுத்தும் அம்பு போன்றது. இந்த இரு அம்புகளும் ஒழுக்க நெறிக்குப் புறம்பாக என்றும் செல்லாத
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.
                                 - கோசலை நாட்டை அழகுப் படுத்தும் நதியின் அழகினை பின்வரும் பாடல்களில் மேலும் எடுத்து உரைக்கப்படும்.


விளக்கம்:

ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் அதன் மக்கள் முதலில் நன்றாக இருக்க வேண்டும். தெருவிலே நடக்க முடியாமலும், தடியெடுத்தவனுக்கு பயந்த படியும் ஒரு நாட்டின் மக்கள் வாழ்ந்தார்களே ஆனால் அந்த நாட்டின் அரசன் ஆட்சி செய்யவில்லை என்றே அர்த்தம். மக்களுக்கு ஒழுக்கமும் தர்மமும் அறமும் நாட்டின் மன்னன் முன்மாதிரியாய் இருந்து எடுத்துக்காட்ட வேண்டும்.மக்களை பல்வேறு விதமாக பிரிக்க இயலும் என்றாலும் மிகவும் எளிதிலும் எடுத்துக்காட்டுக்கு  வசதியானதும் பால் வகை பிரித்தல் ஆகும்.

நாட்டு மக்களை ஆண்கள் பெண்கள் என்று இரண்டு பிரிவாக பிரித்தால், ஆண்களுக்கு பெண்களால் என்ன ஆபத்து ஏற்படும்? பெண்களுக்கு ஆண்களால் என்ன ஆபத்து ஏற்படும்? மற்றும் இரு பாலினரும் தங்களுக்குள்ளே தங்கள் பாலினத்தினர் இடையே என்னென்ன வகையில் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்?

ஆண்கள் தாங்கள் தான் உயர்ந்த பாலினம் என்ற மிதப்பில் பெண்களை போகப் பொருளாக நடப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இதற்கு காரணம் அவர்கள் தங்கள் ஐம்பொறிகளான கண், மூக்கு, வாய், செவி, தோல் இவற்றின் மூலம் பல்வேறு விதமாக எதிர் பாலினமான பெண்களை ஊர்ந்து கவனித்து மனதிற்குள் எல்லைமீறும் உணர்வுகளை வளர்த்து ஒரு வில்லில் இருந்து புறப்பட்ட கொடிய அம்பு எப்படி அதன் இலக்கை தைக்கிறதோ அப்படி பெண்களை தங்கள் ஐம்பொறிகளின் மூலம் ஏற்படும் தீய எண்ணங்களால் ஆண்கள் அம்பு போன்று புண்படுத்தி சேதப்படுத்துகின்றனர். ஆண்கள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் பெரும்பாலும் பாலினம் சார்ந்ததாகவும், பாலின உணர்வு சார்ந்ததாகவுமே இருக்கின்றது.

சில பெண்களின் ஆண்களை தன் அழகால் கவர முயற்சிக்கும்  செயல், பெண்கள் ஒருவகையில் தாங்கள் உயர்ந்த பாலினம் இல்லை என்பதை தாங்களாகவே மறைமுகமாக ஒத்துக் கொள்வது போல இருக்கின்றது. இதனால் தான் பெண்கள் பல சமயங்களில் தாங்கள் அழகு என்பதை நிருபிக்க பல வகை அழகு ஒப்பனைகளையும் உபயோகப்படுத்துகின்றனர். அதன் அடிப்படையில் ஆடவர் மனம் கவர பெண்கள் தங்கள் மேல் சரீரத்தில் இரத்தின மாலைகளை அணிந்து தங்களது வசீகரமான முலைகள் அந்த இரத்தின மாலைகளை ஒன்றோடு ஒன்று உரசவிட்டு ஓசைகளை எழுப்புபவர்களாக உள்ளனர். அப்படி பட்ட பெண்டீர் கண்களும் போர் புரியும் அம்பு போல மிகவும் ஊடுறுவி பாயும் வகையிலும், சொல்லொணா வகையில் தாக்குதல் நடத்தும் வகையிலும் உள்ளன. 

ஆக, சபல மனம் இயற்கையிலேயே படைத்த ஆடவரின் ஐம்புலன்களும் அம்புகள் என கொண்டு; இன்னொரு புறம் ஆடவரை கவர பெண்கள் கண்களால் நடத்தும் ரகசிய சம்பாஷணைகளும் அம்புகள் என கொண்டு; இப்படி இரு பாலினத்தினரும் அம்புகள் தன்னகத்தே கொண்டிருந்தாலும், அந்த அம்புகள் எல்லை மீறுவது சராயு ஆறு பாயும் கோசலை நாட்டில் நிகழ்வது கிடையாது! 

எல்லை மீறுதல் என்பது எதற்கு ஒப்பாகும் என்றால் ஷன்மார்கம் ஆகிய - சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் - இவைகளை துறந்து துன்மார்க்கங்கள் என கருதப்படும் மாந்த்ரீக வழிபாடோ, இல்லை போலியான மாயைகளை வழிபடுவதுலோ கடைபிடித்தலுக்கு ஒப்பாகும்! மதமாற்றத்தை அன்றே கம்பநாடார் எதிர்த்துள்ளனர், எச்சரித்துள்ளார்! 

இப்படிப்பட்ட பெருமைமிகு ஆண்களும் பெண்களும் வாழும் ஸராயு நதி கோசல நாட்டை  எப்படி எல்லாம் அழகுற செய்கிறது என்பதை பார்ப்போம்! என்கிறார் கம்பர் இந்த பாடலில்!







வீட்டுப்பாடம்:
இதில் இருந்து என்ன தெரிகிறது?

1. மதமாற்றம் என்ற பெயரில் நடக்கும் கோமாளிக் கூத்துக்களை அன்றே கலைமகளும், சீதா பிராட்டி சமேத இராமச்சந்திர மூர்த்தியும் கம்ப சித்தருக்கு ஞான கண்ணில் உணர்த்தியுள்ளனர், அதை அவர் பாடல் படுத்தியும் உள்ளார்!

2. ஒரு குடியிருப்புக்கு நீர்நிலை எவ்வளவு முக்கியம் என்பது கம்பர் எனும் கவிச்சித்தர் மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது! கம்பர் மட்டுமல்ல பல சங்ககால  மற்றும் பழங்கால இலக்கியவாதிகளும் இதை உணர்த்துகின்றனர். இது நமது மண்டையில் ஏறாமல் ஏரிகளையும், ஆறுகளையும் பிளாட்டு போட்டு வீடு கட்டிக்கிட்டு இருக்கோம்! விஜயகாந்த் ஸ்டைலில் சொல்லணும்ன்னா "இது எவ்ளோ கேவலம் தெரியுமா?". திராவிடமும் பகுத்தறிவும் வசதியாக இறை மறுப்பு கொள்கையை கையிலெடுத்தது இந்த காரணத்திற்காக தான்! இந்த லட்சணத்தில் இராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் வேற இந்த மூஞ்சிகளுக்கு வேண்டுமாம்!😨😱😰 அவர் எஞ்சினியரிங் படிச்சு முடிச்ச டிப்ளமோ சான்றிதழும் அவசியம் வேண்டுமாம், இல்லையென்றால் இவர்கள் இராமரை அங்கீகரிக்க மாட்டார்களாம்! 😛😜😝